தருமபுரி

நூலக வார விழா

DIN

கடத்தூர் கிளை நூலகம் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்தும் நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா புத்தகக் கண்காட்சி கடந்த புதன்கிழமை தொடங்கியது.
முன்னாள் எம்.பி. இரா.செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
இரண்டாம் நாளாக வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கில், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் ந.நாகராஜன் "இளமையில் கல்' என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ரமாதேவி தலைமை வகித்தார். கடத்தூர் கிளை நூலகர் சி.சரவணன் வரவேற்றார். உதவித் தலைமை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். வெள்ளிக்கிழமை மாலையுடன் விழா நிறைவு பெறுகிறது. புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT