அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
சந்திராபுரம் அருகே நாரியம்பட்டி எனுமிடத்தில் தென்பெண்ணை ஆற்றில் சுமார் 50 வயதுடைய பெண் சடலம் கரை ஒதுங்கியது.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் இல்லை. இதையடுத்து, சந்திராபுரம் கிராம நிர்வாக அலுவலர் சி.சம்பத் (54) அளித்த புகாரின் பேரில், அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டனர்.