தருமபுரி

நக்சல் சுவரொட்டிகளை ஒட்டியதாக 4 பேர் கைது

DIN

தருமபுரி நகரில் நக்சல் ஆதரவு சுவரொட்டிகளை ஒட்டியதாக 4 பேர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
தருமபுரி நாயக்கன்கொட்டாயில் நக்சல்பாரி இயக்கத் தலைவர்களான பாலன், எல். அப்பு ஆகியோருக்கு நினைவிடம்
அமைக்கப்பட்டுள்ளது.
வரும் செப். 12ஆம் தேதி பாலன் நினைவு நாளையொட்டி ஆண்டுதோறும் இந்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதேபோல நிகழாண்டிலும் எல். அப்பு, பாலன் சிலைப் பாதுகாப்பு மற்றும் நில மீட்புக் கூட்டமைப்பு என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கோரி காவல்துறையில் கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், இதுதொடர்பான சுவரொட்டியை நகரப் பகுதியில் அந்த அமைப்பினர் ஒட்டிக் கொண்டிருந்தனர். நகர காவல்துறையினர் இதுதொடர்பாக சிபிஐ (எம்எல்) அமைப்பைச் சேர்ந்த சித்தானந்தம்,  தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மாலெமா) ரமணி மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், வேடியப்பன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT