தருமபுரி

பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு

DIN


தருமபுரியில் கோயிலில் வழிபாட்டுக்கு வந்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்களால் திருடிச் சென்றனர்.
தருமபுரி அருகே சவுளுப்பட்டியைச் சேர்ந்த மணி மனைவி லட்சுமி(50). இவர் சனிக்கிழமை தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றார்.
அப்போது, கோயிலிலிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, லட்சுமி அணிந்திருந்த சுமார் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT