தருமபுரி

தருமபுரியில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்துத் தரக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தருமபுரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சாலை வசதிகளை செய்துத் தர வேண்டும். கேன்டீன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ஆம் தேதி முதல் நீதிமன்றப் புறக்கணிப்பும் நடத்தப்பட்டு வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீதிமன்றப் புறக்கணிப்பு தொடரும் என வழக்குரைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT