தருமபுரி

சித்திரை பெளர்ணமி: அதியமான், ஒளவையார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

DIN


சித்திரை பெளர்ணமியையொட்டி, தருமபுரி வள்ளல் அதியமான்கோட்டத்தில் உள்ள அதியமான் மற்றும் ஒளவையார் சிலைகளுக்கு ஆட்சியர் சு. மலர்விழி சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நினைவை போற்றும் வகையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதியமான் கோட்டம் கட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக அரசின் உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு முதல் சித்திரை பெளர்ணமி நாளன்று அதியமானுக்கு விழா எடுக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு சித்திரை பெளர்ணமி அன்று, கோட்ட வளாகத்தில் உள்ள அதியமான் மற்றும் ஒளவையார் உருவச் சிலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் மு. பாரதிதாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு. ஜனார்த்தனன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT