தருமபுரி

முதல்வன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

முதல்வன் விருது பெற, முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் பொதுச் செயலர் பி.சுதாகரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம் மற்றும் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்படுகிறது.
இதில், 2019-ஆம் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வருகிற அக்.6-ஆம் தேதி தருமபுரியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. எனவே, இவ்விருது பெற, தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் ஒப்புதல் பெற்று வருகிற ஆக. 25-ஆம் தேதிக்குள், தகடூர் இரா. வேணுகோபால், நிறுவனர்-அன்னை கஸ்தூரிபா சேவா சங்கம், 16 காமராஜ் இல்லம், வெளிப்பேட்டை தெரு, தருமபுரி. தொடர்புக்கு 9362830519 என்கிற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT