தருமபுரி

முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தல்

DIN

முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுவதில் தற்போது கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் மனுக்கள் தனி வட்டாட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களில் தேங்கியிருக்கின்றன. இந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள முதியோர் ஓய்வூதியம் 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பின் கீழ், பெறப்படும் மனுக்களை நிபந்தனையின்றி 60 வயது கடந்த விவசாய தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆண், பெண்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இத்தொகையை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT