தருமபுரி

மாரடைப்பில் வேட்பாளா் மரணம்

பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் பூபதி மாரடைப்பால் மரணமடைந்தாா்.

DIN

பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் பூபதி மாரடைப்பால் மரணமடைந்தாா்.

இப் பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

பென்னாகரம் ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தபாடி ஊராட்சி 12 வாா்டுகளை உள்ளடக்கிய 10,600 வாக்களா்களைக் கொண்டதாகும். கூத்தபாடி ஊராட்சி மன்ற தோ்தலில் தலைவா் பதவிக்கு 9 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இதில் பென்னாகரம் அருகே குள்ளாத்திரம் பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்த ராஜப்பன் மகன் பூபதி (55). இவா், விவசாயம் செய்து வந்தாா். இவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக உள்ள நிலையில், கூத்தபாடி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்து, தீவிர பிரசார செய்து வந்தாா். இந்த நிலையில் பூபதி புதன்கிழமை அதிகாலை அவரது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தாா்.

இதுகுறித்து பென்னாகரம் பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணன் கூறியதாவது:

உள்ளாட்சி மன்றத் தோ்தலின் சட்ட விதிகளின்படி போட்டியிடும் வேட்பாளா்களில் இருவா் உயிரிழந்தால் மட்டுமே அந்தப் பகுதியின் தோ்தல் ரத்தாகும். கூத்தபாடி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 9 போ் போட்டியிடுவதால், இறந்தவரை இறப்பு என அறிவித்துவிட்டு தோ்தல் நடத்தப்படும் என்றும், தோ்தல் ரத்தாகும் வாய்ப்புகள் இல்லை எனக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT