தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமத்தில் புதன்கிழமை விவசாயிகளுக்கு கொய் மலர்கள், காய்கறிகள் சாகுபடி பயிற்சி முகாம் நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் பயிற்சியைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
வேளாண் அலுவலர் அருணன், பசுமைக் குடிலில் மலர்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். முன்னோடி விவசாயி சாமிக்கண்ணு சொட்டுநீர் பாசனத்தின் மூலம் காய்கறிகள் சாகுபடி செய்யும் துல்லியப் பண்ணைய தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கமளித்தார். அட்மா திட்ட அலுவலர்கள் ப.ரவி, சண்முகம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.