தருமபுரி

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

DIN

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
கடந்த பிப்.18-ஆம் தேதி முதல் தொடங்கி வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி வரை நடைபெறும் இம் முகாமில், நாள்தோறும், பள்ளி மற்றும் கோயில் வளாகங்களைத் தூய்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், புதன்கிழமை (பிப்.20) டாடா நகர் பள்ளி சாலை, கோயில் உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாணவர் வளமும் நாட்டு நலமும் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
இதில், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வே. அல்லிமுத்து, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் விஜயதேவன், கு. சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT