தருமபுரி

மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், வரும் ஜன. 24 அன்று 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு நேர்முகத் தேர்வு மூலம் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மிதமான அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீத பாதிப்புடைய நுண் அறிவுத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மகளிருக்கு இந்த மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. எனவே, 45 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள், தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றுடன் ஜன. 24-ஆம் தேதி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT