தருமபுரி

தடுப்புச் சுவரை சீரமைக்கக் கோரிக்கை

DIN

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் சேதமடைந்த சாலையோர தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர்-சேலம் நெடுஞ்சாலையில், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் சிறுபாலம் உள்ளது. இந்த சிறுபாலத்தில் தடுப்புச் சுவர் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்துச் செல்கின்றன. சாலையோர தடுப்புச் சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் எதிர் எதிரே வாகனங்கள் வரும்போது, பள்ளமான பகுதியில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து நேரிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, சாமியாபுரம் கூட்டுச் சாலையில் உள்ள சிறுபாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT