தருமபுரி

ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தவர் பலி

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வெள்ளிக்கிழமை விரைவு ரயிலில் பயணித்தவர் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து சேலம், தருமபுரி வழியாக பெங்களூருக்கு விரைவு ரயில் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ரயில் நிலையத்தைக் கடந்து சென்றது. அப்போது, அந்த ரயிலில் சென்ற பயணி ஒருவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த தருமபுரி ரயில்வே போலீஸார், நிகழ்விடத்துக்கு சென்று உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர மவுர் (49) என்பதும், அவர் ரயிலில் எஸ்-8 எண் கொண்ட பெட்டியில் பயணித்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் தவறி கீழே விழுந்து இறந்தது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT