தருமபுரி

அரூரில் 22 தனியார் பள்ளி பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து

DIN

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் இயக்கப்படும் 22 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளின் தகுதிச் சான்றுகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
 அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளை ஆய்வு செய்வதற்கான முகாம் நம்பிப்பட்டியில் நடைபெற்றது. இந்த முகாமினை தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தொடக்கி வைத்தார்.
இந்த முகாமில், 290 தனியார் பள்ளி வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், குறைபாடுடைய 22 பேருந்துகளின் தகுதிச் சான்றுகள் ரத்து செய்யப்பட்டன. 
மேலும், சிறு குறைபாடுகள் உடைய 17 பேருந்துகளை குறைபாடுகளை நிவர்த்தி செய்து வர முகாமில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT