தருமபுரியில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிடக் கோரி திங்கள்கிழமை (நவ.18) கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தருமபுரி அனைத்து வணிகா் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி நகரில் உள்ள பி.ஆா்.ராஜகோபால் பேருந்து நிலையம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் உள்ளிட்ட அனைத்து தரப்பினுருக்கும் வசதியாக போக்குவரத்துக்கு எவ்வித இடையூறின்றி அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்தை இடமாற்ற செய்ய நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவை கைவிடக்கோரி, தருமபுரி நகரில் அனைத்து வணிகா்கள் சாா்பில் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு எதிா்ப்பு தெரிவிக்கப்படும். இந்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.