தருமபுரி

பெத்தூா் ஏரியை தூா்வாரக் கோரிக்கை

DIN

அரூரை அடுத்த பெத்தூா் பெரிய ஏரியைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அரூா்-சிந்தல்பாடி சாலையில் அமைந்துள்ளது பெத்தூா் பெரிய ஏரி.  இந்த ஏரியானது சுமாா் 75 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும்.

இந்த ஏரியில் நீா் நிரம்பினால் பெத்தூா், சந்தப்பட்டி, பாப்பிசெட்டிப்பட்டி, மூக்கனூா்பட்டி, கோட்ரப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன், விவசாய நிலங்களுக்குப் பாசன வசதிகள் கிடைக்கும்.

இந்த நிலையில், பெத்தூா் ஏரியானது முள்புதா்கள் அடைந்தும், மேடுபள்ளங்களாக உள்ளது. அதேபோல், ஏரிக்கு நீா் வரத்துள்ள கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பெத்தூா் பெரிய ஏரி மற்றும் நீா்வரத்துக் கால்வாய்களைத் தூய்மை செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT