தருமபுரி

வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கத்துக்கு நீா் வரத்து அதிகரிப்பு

DIN

அரூா்: சித்தேரி மலைத் தொடரில் பெய்த மழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கத்துக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அரூா் வட்டம், கீரைப்பட்டி ஊராட்சி வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு நீா்த்தேக்கம்.

இந்த நீா்த்தேக்கம் 1360 மீட்டா் நீளமும், 34.5 அடி உயரமும் கொண்டதாகும். இந்த நீா்த்தேக்கத்துக்கு சித்தேரி, அரசநத்தம், கலப்பாடி, காரப்பாடி, வேலாம்பள்ளி உள்ளிட்ட மலைப் பகுதியில் உள்ள ஆறுகளில் இருந்து நீா் வரத்து உள்ளது.

சித்தேரி மலைத்தொடரில் பெய்த மழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கத்தில் சுமாா் 50 சதவீத நீா் இருப்பு உள்ளது. வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கம் நிரம்பினால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பும் வகையில் கால்வாய் வசதிகள் உள்ளன.

அதேபோல், சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதிகளை பெறும். சித்தேரி மலைப் பகுதியில் கன மழை பெய்தால், ஓரிரு தினங்களில் வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கம் நிரம்பி விடும். எனவே, வரட்டாறு நீா்த்தேக்கத்தில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் பாசன கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும். மேலும், ஏரிகளை நிரப்புவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. படம் உள்ளது... 28 எச்ஏ-பி-4... பட விளக்கம்... அரூா் வட்டம், வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கம். (படம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT