தருமபுரி

கூட்டுறவு ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் தேர்வு

DIN

தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டனர். 
தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களிடையே தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் செப்.21-ஆம் தேதி தேர்தல் அலுவலர் டி.ஆர்.ராஜதுரை முன்னிலை நடைபெற்றது. இத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.மாதையன் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராகவும், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் எம்.பொன்னுவேல் கூட்டுறவு ஒன்றியத்தின் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான சான்றிதழ்களை பெற்ற இருவரும் பதவியேற்றுக்கொண்டனர். 
இவர்களை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய இயக்குநர்களான வெங்கடேசன், சாம்பசிவம்,  மாதேஸ்வரி, லட்சுமி, தமயந்தி, உமா உள்ளிட்ட 19 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர். விழாவில், கிருஷ்ணகிரி தொகுதி முன்னாள் எம்.பி. அசோக்குமார், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் ரவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT