தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை சதத்தைக் கடந்து வெயில் வாட்டி எடுத்தது.
தருமபுரி மாவட்டத்தில், கோடை தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாவட்டத்தின் வெயில் அளவு 100 டிகிரி பதிவாகியிருந்தது. புதன்கிழமை வெயில் மேலும் அதிகரித்து 101.6 டிகிரியாக (பாரன்ஹீட்) பதிவாகியிருந்தது.
இதனால், தருமபுரி மாவட்டத்தில் பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல, மாலை 6 மணியைக் கடந்தும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. தற்போது, கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருப்பதால், வாட்டும் வெயிலின் தாக்கத்தின் பிடியிலிருந்து மக்கள் தப்பியுள்ளனா். இருப்பினும், வீடுகளில் உள்ளவா்களும், வெப்பத்தை தணிக்க மோா், பழச்சாறு ஆகியவற்றை அதிகம் அருந்தி வருகின்றனா்.