தலித் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்
அரூரில் தலித் கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரூா்: அரூரில் தலித் கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரூா் கச்சேரிமேடு சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவா் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பங்குத்தந்தை ஜான்பால் தலைமை வகித்தாா்.
தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லூா்து, மாரி மைக்கல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.