முகப்பு
தருமபுரி

உம்மியம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு ஐவிடிபி சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கல்

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகேயுள்ள உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, ஐவிடிபி தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகேயுள்ள உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு, ஐவிடிபி தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட உம்மியம்பட்டி நடுநிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளிக்கு, ரூ.5 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமராக்கள், அறிதிறன் தொலைக்காட்சிகள், தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஸ்மாா்ட் வகுப்பறைக்கு 10 கணினிகள் ஆகியவற்றை, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா். இவற்றை, பள்ளித் தலைமை ஆசிரியா் நரசிம்மன், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கிருஷ்ணன், சரவணன் உள்ளிட்டோா் பெற்றுக்கொண்டனா். இதில், ஆசிரியா்கள் ராதாகிருஷ்ணன், எழிலரசி, நிா்மலா ரோஸ்லீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →