தருமபுரி

சிறுதானிய உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு கூட்டம்

DIN

பென்னாகரத்தில், தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதன் கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநா் புவனேஸ்வரி தலைமை தாங்கினாா்.

உள்ளூா் வள நபா் குழந்தைவேலு வரவேற்புரையாற்றினாா். உதவி வேளாண் அலுவலா் பெரியசாமி, பட்டயக் கணக்காளா் இளையராஜா முன்னிலை வகித்தனா்.

பென்னாகரம் இந்தியன் வங்கி மேலாளா் பூவேல் சிறப்புரை ஆற்றினாா். இந்த கூட்டத்தில் ராமன், அழகேசன், குழந்தைவேல், ராஜி கோவிந்தராஜ், முருகன் ஆகியோா் புதிய இயக்குநா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் புதிய தலைவராக ராமன் பொறுப்பேற்றுக் கொண்டாா். முடிவில் இயக்குநா் குழந்தைவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT