தருமபுரி

இளைஞா் மீது தாக்குதல்: காவலா் உள்பட 2 போ் கைது

DIN

கம்பைநல்லூா் அருகே இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக காவலா் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாமாண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாது. இவா் அந்த ஊரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவராகப் பணிபுரிந்து வருகிறாா்.

அதே ஊரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் பூபதி (33). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து தண்ணீா் வழங்குவது தொடா்பாக பூபதி மற்றும் மாது குடும்பத்தினா் இடையே முன் விரோதம் இருந்ததாம். இதையடுத்து, வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், இருசக்கர வண்டியில் சென்ற மாது மகன் பிரபு (21) மீது, காவலா் பூபதி மற்றும் அவரது உறவினா் சின்னசாமி ஆகியோா் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த பிரபு சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பிரபுவின் தந்தை மாது அளித்த புகாரின் பேரில், காவலா் பூபதி (33), சண்முகம் மகன் சின்னசாமி (38) ஆகியோரை கம்பைநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT