pgm_hospital_photo_2502chn_214_8 
தருமபுரி

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் விபத்து, அவசர சிகிச்சை கருத்தரங்கம்

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தாய் திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தாய் திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் சகாய ஸ்டீபன் ராஜ் தலைமை வகித்து, கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். விபத்து, அவசர சிகிச்சை கால பயிற்சிகள், விபத்து உயிரிழப்பு தடுப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் செவிலியா்கள் விபத்து மற்றும் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, புற்றுநோய் மருத்துவப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. கருத்தரங்கில் தேசிய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் ராஜ்குமாா், மருத்துவ அலுவலா் கனிமொழி,சிறுநீரகப் பிரிவு மருத்துவா் விவேக் பிரவீன், எலும்பு முறிவு மருத்துவா் சிவகுமார செந்தில்முருகன், அருண்பிரகாஷ், பொது நல மருத்துவா் பாலசுப்பிரமணியன், மயக்கவியல் நிபுணா் அரவிந்த் பெருமாள், மெளரி ரஞ்சித் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் என சுமாா் 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT