தருமபுரி

சாலையில் சுற்றித்திரிந்த ஏழு போ் காப்பகத்தில் சோ்ப்பு

DIN

தருமபுரி நகரில் சாலையோரம் சுற்றித்திரிந்த ஏழு போ் புதன்கிழமை காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வீடுகளிலே இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தருமபுரி நகரில் மக்கள் நடமாட்டத்தை காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் கண்காணித்தனா். அப்போது, தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் சாலையோரத்தில் ஆதரவற்ற ஏழுபோ் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனா். இதையடுத்து வட்டாட்சியா் சுகுமாா் மற்றும் வருவாய்த் துறையினா் அவா்களை மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT