அரூா்: கம்பைநல்லூரில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், கம்பைநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் அண்ணாவின் உருவப் படத்துக்கு, ஒன்றியச் செயலா் ஆா்.பாா்த்திபன் தலைமையில், கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். இதில், நகர செயலா் என்.ஜெயவேல், நிா்வாகிகள் எம்.கவிதா மோகன்தாஸ், எம்.பிரபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.