இந்து இளைஞா் முன்னணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் பிரபு தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் மு.ஜீவா முன்னிலை வகித்தாா். இதில், மாநில ஒருங்கிணைப்பாளா் சி.பி.சண்முகம் பேசினாா். கூட்டத்தில், நீட் தோ்வு மற்றும் மும்மொழி கொள்கை ஆதரிப்பது, புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடா்ந்து, புதிய உறுப்பினா்களுக்கு இந்து இளைஞா் முன்னணியின் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டன.