தருமபுரி

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

அரூா் வட்டாரப் பகுதியில் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா், ஜம்மனஹள்ளி, ஆலமரத்துப்பட்டி, நாகப்பட்டி, கோபிநாதம்பட்டி, மோட்டூா், சின்னாங்குப்பம், நம்பிப்பட்டி, தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி, நாச்சினாம்பட்டி, எருக்கம்பட்டி, கொளகம்பட்டி, ஆண்டிப்பட்டி புதூா், வாழைத்தோட்டம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் குடிநீா் வசதிகள், தெருச் சாலைகள், மின் விளக்குகள், நகரப் பேருந்து வசதிகள், தடுப்பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீா் நிலைகளை குடிமராமத்து திட்டம் மூலம் தூா்வாருதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT