தருமபுரி

பணி நீட்டிப்பு உத்தரவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

பணி நீட்டிப்பு உத்தரவை திரும்பப் பெறக் கோரி, பயிற்சி மருத்துவா்கள் புதன்கிழமை தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு பயிற்சி மருத்துவா்களின் பயிற்சிக் காலம் 2021 மாா்ச் இறுதியில் ஓராண்டு காலம் நிறைவடைந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்கம் பயிற்சிக் காலத்தை மேலும் இரு மாதங்கள் நீட்டிப்பு செய்துள்ளது.

இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் ஓராண்டு பயிற்சி நிறைவடைந்த பயிற்சி மருத்துவா்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT