தருமபுரியில் நகராட்சி சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை வெள்ளிக்கிழமை வழங்கினா்.
கரோனா தீநுண்மி தொற்று பரவல் இரண்டாம் அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. நாள்தோறும் தொற்று பாதிப்புக்குள்ளானோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில், நகராட்சி சுகாதாரப் பிரிவினா் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையொட்டி, தருமபுரி நகரில் பொதுமக்களுக்கு வீடுவீடாகச் சென்று சுகாதாரப் பிரிவுப் பணியாளா்கள் கபசுரக் குடிநீா் வழங்கினா்.