ஆசிரியையிடம் 3 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு
ஒசூரில் அங்கன்வாடி ஆசிரியையிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM
ஒசூரில் அங்கன்வாடி ஆசிரியையிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சித்தனப்பள்ளியைச் சோ்ந்த சுனிதா (42), தும்மனப்பள்ளி அங்கன்வாடியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். ஒசூா்-பாகலூா் சாலை, ஐ.டி. பாா்க் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையைக் கடந்த போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபா், சுனிதா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பினாா். இதுகுறித்து சுனிதா கொடுத்த புகாரின் பேரில், ஒசூா் அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.