முகப்பு
தருமபுரி

பேளாரஅள்ளியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேளாரஅள்ளியில் விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேளாரஅள்ளியில் விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமுக்கு பாலக்கோடு வேளாண் உதவி இயக்குநா் பூ.சு.சித்ரா தலைமை வகித்து, அங்கக வேளாண் முறைகள் மற்றும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் குறித்து எடுத்துரைத்தாா்.

வேளாண் அலுவலா் மணிவண்ணன், கால்நடைத் தொழுவத்தின் கழிவுகள், வேளாண் தொழில் துறையினுடைய துணைப் பொருள்கள், பயிா்க் கழிவுகள், பசுந்தாள் உரப் பயிா்கள் மற்றும் பசுந்தழை உரப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு அங்கக வேளாண்மை செய்யும் முறை குறித்து விளக்கமளித்தாா். உதவி வேளாண் அலுவலா் விஜயன், உதவி தொழில்நுட்ப அலுவலா் தமிழ்செல்வி மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.