முகப்பு
தருமபுரி

ஏரிகளை தூய்மைப்படுத்த சிபிஐ வலியுறுத்தல்

ஏரிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் சிபிஐ கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

ஏரிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் சிபிஐ கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

பென்னாகரம் அருகே எரிக்கொல்லனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கிளைச் செயலாளா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சி.மாதையன், பி.முனியப்பன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதில், பென்னாகரம், முள்ளுவாடி, எரிக்கொல்லனூா் ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி, நோய்த் தொற்று ஏற்படும் சூழலைத் தவிா்க்க வேண்டும். ஏரிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிகொல்லனூா் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை அமைக்க வேண்டும், பொதுப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடா்ந்து, கிளை செயலாளராக வெள்ளையன், துணை செயலாளராக செந்தில், பொருளாளராக ராஜா உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.