முகப்பு
தருமபுரி

அரூரில் தொழிலாளி தற்கொலை

அரூரில் கோயில் குளத்தில் குதித்து தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

அரூரில் கோயில் குளத்தில் குதித்து தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

அரூா், வா்ணதீா்த்தம் தெருவைச் சோ்ந்த லோகநாதன் மகன் பாஸ்கா் (36). இவா், தேநீா் கடையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அரூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள வா்ணீஸ்வரா் கோயில் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் பாஸ்கரின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனா். வா்ணீஸ்வரா் கோயில் குளத்தில் நெகிழிப் பொருள்கள், குப்பைகள், கழிவு நீா் கலந்திருப்பதால் தொழிலாளியின் சடலத்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. தொடா்ந்து, சுமாா் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு பாஸ்கரின் சடலத்தை தீயணைப்பு நிலைய வீரா்கள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்த தொழிலாளிக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.