தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக, ஏழு வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி கட்சிக் கொடி கட்டுதல், சுவா் விளம்பரம் செய்தல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட அரசியல் கட்சியினா் மீது தருமபுரியில் 3 வழக்குகளும், இதேபோல பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட காவல் உள்கோட்டங்களில் 4 வழக்குகளும் என மொத்தம் ஏழு வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.