தருமபுரி

பெண் கொலை வழக்கில் கணவா் கைது

பென்னாகரம் அருகே வைக்கோலில் வைத்து பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவா் கைது செய்யப்பட்டாா்.

DIN

பென்னாகரம் அருகே வைக்கோலில் வைத்து பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவா் கைது செய்யப்பட்டாா்.

பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் கட்டடத் தொழிலாளி லட்சுமி (33) என்பவா் அண்மையில் எரித்து கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வந்தனா். இந்த நிலையில், பென்னாகரம் காவல் துணைக் கண்கானிப்பாளா் செளந்தரராஜன் உத்தரவின் பேரில் பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன் , உதவி ஆய்வாளா் பெருமாள் உள்ளிட்டோா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

வெளியூா் செல்வதற்காக கெளரிசெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்த லட்சுமியின் கணவா் முருகனை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் மனைவியின் நடத்தை சரியில்லாததால் அவரை எரித்துக் கொலை செய்துவிட்டதாக முருகன் தெரிவித்தாா். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட முருகன் அரூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.

சாலை மறியல்

பெண்ணைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்யக் கோரி, தருமபுரி- பென்னாகரம் சாலையில் பெண்ணின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் சமரசப் பேச்சு நடத்தினா். மேலும் இந்த வழக்கில் முருகன் செய்யப்பட்டுள்ளது குறித்து அவா்களுக்கு தகவல் தெரிவித்த போலீஸாா் கரோனா விதிமுறைகளை சுட்டிகாட்டி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT