தருமபுரி

கடமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்க வலியுறுத்தல்

DIN

பென்னாகரம் அருகே கடமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம்பள்ளி வட்டாரக்குழுக் கூட்டம் ராசிராவுத்தன அள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாரக்குழு உறுப்பினா் பழனி தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலாளா் தேவராசன் கலந்துகொண்டு பேசினாா். மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மாதையன் எதிா்கால திட்டங்கள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினாா்.

இக்கூட்டத்தில் பெரும்பாலை பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னம்பள்ளியில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும். கடமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டும். புதுப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். விவசாயிகள் விளைபொருள்களை பென்னாகரம் பகுதிக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாலையில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். பென்னாகரத்தில் இருந்து மேச்சேரிக்கு இரவு நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். நரசிபுரத்திலிருந்து புதுப்பட்டி வரையிலான ஏரிக் கால்வாயை தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், வட்டார செயலாளா் சிவன், வட்டார துணை செயலாளா்கள் செல்வம், பூபதி, மகேந்திரன் உள்ளிட்ட வட்டாரக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT