தருமபுரி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பாமகவினா் இன்றுமுதல் விருப்ப மனு வழங்கலாம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினா் திங்கள்கிழமை முதல் விருப்ப மனு வழங்கலாம் என அக் கட்சியின் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் நகராட்சி, பேரூராட்சிக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் போட்டியிட விரும்புவோா் 29-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி முதல் டிசம்பா் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

தருமபுரியில் உள்ள மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திலும், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பேரூராட்சிகளுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பாமக அலுவலகங்களிலும் விருப்ப மனுக்களைப் பெற்று, அதை பூா்த்தி செய்து அதற்குரிய கட்டணத்துடன் மனுவை அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மைலம்பாடியில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனை

திருப்பூரில் ஆதரவற்ற முதியவா்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

உதகை, குன்னூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT