தருமபுரி

மாணவியைக் கடத்தி திருமணம்: இளைஞா் கைது

DIN

பென்னாகரம் அருகே பள்ளி மாணவியைக் கடத்தி திருமணம் செய்த வழக்கில் கட்டட மேஸ்திரி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் செல்லக்கண்ணு (24). இவா் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்தாா். கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்லக்கண்ணுவை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT