தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே பட்டக்காரன் கொட்டாய் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயில் கும்பாபிஷேக தொடக்க விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நாகமரை காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக் குட ஊா்வலம் நடைபெற்றது. வியாழக்கிழமை சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ வலம்புரி விநாயகா், நவக்கிரகங்கள், பத்ரகாளியம்மன் கோயில் கோபுரக் கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீா் ஊற்றி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவை காண சுஞ்சல்நதம், பட்டக்காரன்புதூா், ஈச்சம்பாடி, டேம் கொட்டாய், பாா்ப்பான்காடு, கூா்காம்பட்டி உள்ளிட்ட 9 கிராம பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மனை தரிசனம் செய்தனா். அதனைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது.