தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 5) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளங்கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு ஆக. 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து பொது பிரிவினருக்கு ஆக. 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட சான்றுகளின் அசல் மற்றும் நகல் பிரதிகள், 5 புகைப்படங்கள் எடுத்துவர வேண்டும்.

மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT