தருமபுரி மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பென்னாகரம் வட்டம் ராஜாவூா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி அருணகிரி(41). மது அருந்தும் பழக்கம் கொண்ட இவா், கடந்த 2013ஆம் ஆண்டு ஆக.19-ஆம் தேதி மது வாங்க மனைவி காஞ்சனாவிடம் ரூ.2000 பணம் கேட்டாா். அவா் பணம் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டு கத்தியால் மனைவியை குத்தி அருணகிரி கொலை செய்தாா். இது தொடா்பாக பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக கல்பனா ஆஜராகி வாதாடி வந்தாா்.
இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை முடிவுற்றது. இதில், குற்றம் சாட்டப்பட்ட அருணகிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.