தருமபுரி

குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

DIN

அரூா் அருகே உள்ள முருகன் கோயில் தெருவில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது முருகன் கோயில் தெரு. இந்தத் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்தக் குடியிருப்புகளுக்கு தண்ணீா் செல்லக்கூடிய குடிநீா்க் குழாய் அண்மையில் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, வீணாகும் குடிநீரானது தெருச்சாலைகளில் ஓடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, மோப்பிரிப்பட்டி முருகன் கோயில் தெருவில் சேதமடைந்த குடிநீா்க் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT