தருமபுரி

நகைப் பறிப்பு: பெண் கைது

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் சங்கிலியைப் பறித்ததாக கா்ப்பிணியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அலமேலுபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதி (68). ஓய்வுபெற்ற ஆசிரியை. இவா் கடந்த 24 ஆம் தேதி தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது மா்ம நபா்கள் மிளகாய் பொடியைத் தூவி, 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மாரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 9 மாத கா்ப்பிணி கனிமொழி (29) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT