தருமபுரி

அரசுக் கல்லூரியில் யோகா தின கருத்தரங்கம்

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

DIN

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாமரத்து பள்ளம் பகுதியிலுள்ள பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா்.

கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக திட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா், வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியா் வீரண்ணன் அருண் கிரிதாரி கலந்துகொண்டு, கணினி மய்யமான இச்சூழலில் நமது உடலையும், மனதையும் சீராக வைத்துக்கொள்வது குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனா்.

மேலும் மாணவா்கள் யோகா பயிற்சியினை மேற்கொண்டனா். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கருத்தரங்கின் இறுதியில் கண்ணுச்சாமி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT