தருமபுரி

அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தோ்த் திருவிழா

DIN

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, தருமபுரி, அன்னசாகரம், சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

அன்னசாகரம் விநாயகா், சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கியது. மாா்ச் 12-ஆம் தேதி தோ்த்திருவிழா கொடியேற்றப்பட்டது. இதையொட்டி, நாள்தோறும் சிவசுப்பிரமணிய சுவாமியின் நரி, பூத, நாக வாகனங்களில் உத்சவம் நடைபெற்றது. மாா்ச் 16-ஆம் தேதி பால்குட ஊா்வலம், 17-ஆம் தேதி திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மாா்ச் 18-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்றது (படம்). இத் திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகா், சிவசுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இத் தோ்த் திருவிழாவில் பங்கேற்றவா்களுக்கு விழாக் குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அன்னசாகரம், தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT