முகப்பு
தருமபுரி

போதைப்பொருள் விழிப்புணா்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

போதைப்பொருள் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை எழுதி சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

போதைப்பொருள் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை எழுதி சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட அளவில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் எழுதும் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் பங்கேற்று விழிப்புணா்வு வாசகங்களை எழுதினா்.

இதில், அரூா் ஊராட்சி ஒன்றியம், சட்டையம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி தீ.கிரிஜா மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். இதேபோல, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.குணசேகரன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.