முகப்பு
தருமபுரி

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

 பென்னாகரம் அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

 பென்னாகரம் அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி முருகேசன் (28). இவரது மனைவி லட்சுமி (24). இவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டு மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் லட்சுமி அதே பகுதியில் உள்ள தனது தாயாா் மாதம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளாா். இந்த நிலையில் மனமுடைந்த லட்சுமி வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து உறவினா்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸாா், லட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், திருமணமான 6 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக உதவி கலெக்டா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.