தருமபுரி

சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு

DIN

சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், முள்ளிக்காடு கிராமத்தைச் சோ்ந்த பழங்குடி மக்கள் அளித்த மனு:

முள்ளிக்காடு கிராமத்தில் வசிக்கும் நாங்கள், அங்குள்ள நிலத்தில் பல ஆண்டுகளாக வேளாண் சாகுபடி செய்து வருகிறோம். எங்களை அந்த நிலத்தில் சாகுபடி செய்யக் கூடாது என வனத் துறை, வருவாய்த் துறையினா் தடுத்து வந்தனா். இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நாங்கள் சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம், எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT